NATIONAL

சிலாங்கூர் மற்றும் மத்தியத்தை ஆளும் அதிகாரத்தை வழங்குக!!

அம்பாங்,மே02:

சிலாங்கூர் மாநிலத்தை தொடர்ந்து ஆட்சி செய்ய ஹராப்பான் கூட்டணி வாய்ப்பளிப்பதோடு நாட்டையும் ஆளும் அதிகாரத்தை மக்கள் ஹராப்பான் கூட்டணிக்கு வழங்கிட வேண்டும் என லெம்பா ஜெயா சட்டமன்ற வேட்பாளர் ஹனிசா தல்ஹா கேட்டுக் கொண்டார்.

நாட்டின் எதிர்காலம் மக்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மக்கள் இந்த விவேகமான முடிவினை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் ஹராப்பான் கூட்டணி மக்களுக்கான அரசாங்கமாய் விளங்கும் என்பதற்கு சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்கள் பெரும் சான்று எனவும் நினைவுறுத்தினார்.

சுமார் பத்தாண்டுகளில் சிலாங்கூர் 40 பரிவு மிக்க திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் சுபிட்சத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் நினைவுக்கூர்ந்தார்.

லெம்பா ஜெயா மக்கள் விவேகமானவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.சிலாங்கூர் மாநிலத்தையும் மத்திய அரசையும் ஹராப்பான் கூட்டணி வழிநடத்தும் வாய்ப்பினை அவர்கள் கொடுப்பார்கள் எனும் பெரும் நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கெஅடிலான் கட்சியின் மகளிர் துணைத்தலைவியுமான அவர் தேசிய முன்னணிக்கு 60ஆண்டுகள் போதும் என்றும் புத்ரா ஜெயாவை ஹராப்பான் கூட்டணியிடம் கொடுங்கள் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறுவர் என்று உறுதி அளித்தார்.

இன்றைய சூழலில் அன்றாட வாழ்க்கை சூழல் பெரும் இன்னல்கள் மத்தியில் நகர்கிறது.பொருளாதார சுமை தொடர்ந்து அதிகரிக்கிறது.ஜி.எஸ்.டி மக்களின் கழுத்தை நெரிக்கிறது.இவை முற்றாக மாற வேண்டும்.நாட்டின் மேம்பாட்டிற்கு ஜி.எஸ்.டி அவசியம் எனும் தேசிய முன்னணியின் வாதம் அறிவுக்கு ஒப்பாதது என்றார்.

மக்களின் வாழ்வாதாரம் சிறக்கவும்,அவர்கள் தொடர்ந்து வளர்ச்சியையும் மேம்பாட்டையும் நோக்கி முன்னேற ஹராப்பான் கூட்டணியே காலத்திற்கு ஏற்றது என்றும் கூறிய அவர் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.


Pengarang :