SELANGOR

மந்திரி பெசார்: திங்கள்கிழமை, ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்

கிள்ளான், மே 12:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, எதிர் வரும் திங்கள்கிழமை சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவி நியமனம் செய்யப்பட உள்ளனர் என கூறினார்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றார். பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில மன்னரிடம் வழங்கப் படும் என்று விவரித்தார்.

 

 

 

 

 

சிலாங்கூர் மாநில மன்னரை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்க இருக்கிறேன். பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து முடியும் வகையில் திங்கட்கிழமை மாலை 2.30 மணிக்கு பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளப் படும்,” என்று அஸ்மின் அலி கூறினார்.

ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில மன்னரின் அதிகாரப்பூர்வ அரண்மனையில் நடைபெற்ற மந்திரி பெசார் பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு  பேசினார்.


Pengarang :