NATIONAL

அன்வாருக்கு போட்டியில்லை, துணைத் தலைவருக்கு இருவர் & உதவித் தலைவர் பதவிக்கு 12 பேர்கள் போட்டி?

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 5:

2018-ஆம் ஆண்டிற்கான கெஅடிலான் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்த அறிவிப்பை மத்திய தேர்தல் குழுவின் (ஜேபிபி) செயலாளர் இஸ்மாயில் யூசுப் வேட்புமனு தாக்கல் மாலை மணி 5.00 முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இதனிடையே, கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நடப்பில் இருக்கும் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தற்காக்க போராட்டம் நடத்துவார் என்றும். அவரை எதிர்த்து முன்னாள் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி போட்டியிடுவார்.

மேலும், நான்கு உதவித் தலைவர் பதவிக்கு மொத்தம் 12 தலைவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். இதையடுத்து, 20 பேர்கள் கொண்ட மத்திய தலைமைத்துவ மன்றத்திற்கு மொத்தம் 86 பேர்கள் போட்டி இடுகின்றனர்.


Pengarang :