NATIONAL

அஸ்மின்: எச்எஸ்ஆர் திட்டம் தொடர்பில் சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை ஏதும் இல்லை?

கோலா லம்பூர், ஆகஸ்ட் 8:

கோலாலம்பூர் – சிங்கப்பூர் விரைவு இரயில் திட்டம் (எச்எஸ்ஆர்) தொடர்பில் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சருடன் சந்திப்பு ஏதும் இது வரை இல்லை என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி உறுதிப் படுத்தினார். சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த ஜூலை 31-க்குள் பேச்சுவார்த்தை நடத்த பரிந்துரை செய்திருந்தாலும், மக்களவையின் கூட்டத்தொடர் நடப்பதால் இதைச் செய்ய முடியவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

” போக்குவரத்து அமைச்சுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக நான் அறிவித்தேனா? நான் ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்து ஆகஸ்ட் மாதத்தில் சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்வேன்,” என்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.


Pengarang :