NATIONAL

கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் பதவி இதற்கு மேல் கிடையாது ?

ஷா ஆலம், நவம்பர் 19:

கடந்த 2007-இல் இருந்து நடப்பில் உள்ள கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் பதவி இதற்கு மேல் கிடையாது என்று அதன் புதிய தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இந்த மூத்த ஆலோசகர் பதவி கடந்த 2007-இல் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கொண்டு வரப்பட்டது என்றும் அப்போதைய சூழ்நிலையில் தாம் தலைவர் பதவியை வகிக்க முடியாது என்பதால் உருவாக்கப்பட்டது என்று விவரித்தார்.

” கட்சியின் சட்டவிதிகளில் இந்த பதவி இல்லை. ஆனால், கட்சியின் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்து என்னை நியமனம் செய்தார்கள். தற்போது, இந்த பதவி தேவையில்லை. நான் கட்சியின் தேசிய தலைவர் ஆகி விட்டேன். தற்போது புதியதாக கெஅடிலான் கட்சியின் ஆலோசக மன்றத் தலைவர் பதவி உருவாக்கப் பட்டுள்ளது,” என்று ஐடிசிசி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் 13-வது தேசிய மாநாட்டில் தமது உரையில் அன்வார் இவ்வாறு  கூறினார்.


Pengarang :