SELANGOR

கல்வி உபகாரச்சம்பள நிதி உதவிக்கு வெ.16.6 மில்லியன்

ஷா ஆலம்,நவம்பர் 23:

2019ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவு திட்டத்தில் மாநில அரசாங்கம் கல்வி உபகாரச்சம்பளத்திற்காக வெ.16.6 மில்லியனை ஒதுக்கியது.

இந்த உபகாரச்சம்பளம் சகோங் தாஷி மற்றும் சுல்தான் சிலாங்கூர் (அலாம் ஷா பள்ளிக்கூடம்,புத்ராஜெயா) மற்றும் மந்திரி பெசார் உபகாரச்சம்பளம் ஆகிய அடிப்படையில் வழங்கப்படும் என மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார்.

ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மாணவர்களின் கல்விக்கு பெரும் உதவி செய்வதோடு அவர்களின் எதிர்காலத்திற்கும் பெரும் பங்காற்ற வழி செய்ய முடியும் எனும் நம்பிக்கையையும் அவர் பதிவு செய்தார்.

அதேவேளையில்,ஆக்கப்பூர்வமான கல்வியல் திட்டத்தை உருவாக்கமும் இவை உதவிடும் எனவும் மேலும் தெரிவித்தார்.

உபகாரச்சம்பளம் மட்டடுமின்றி உயர்கல்விகூட மாணவர் பரிவு திட்டங்கள் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு செயல்பாடுகள்,இளங்கலை பட்டப்படிப்பு உட்பட பல்வேறு நிலைகளில் அஃது பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


Pengarang :