NATIONAL

அடுத்த ஆண்டில், 21 தோல்சாவடிகளில் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது

புத்ரா ஜெயா, டிசம்பர் 27:

21 தோல்சாவடிகளில் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். அடுத்த ஆண்டில், எல்லா ரக வாகனங்களுக்கும் கட்டண உயர்வு இருக்காது என்றார்.

கட்டண உயர்வை கட்டுப்படுத்திய நடவடிக்கை மத்திய அரசாங்கத்திற்கு ரிம 994.43 மில்லியன் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை லிம் உறுதி படுத்தினார். இந்த அறிவிப்பு 2019ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறினார். இதற்கு முன் நகரங்களில் அமைந்துள்ள தோல்சாவடிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :