செப்பாங், ஜனவரி 7:
2020ஆம் ஆண்டை சிப்பாங்கிற்கு வருகை புரியும் ஆண்டாக பிரபலப்படுத்தும் பொருட்டு நாட்டில் உள்ள 9 மாநிலங்களுக்கு இந்த இயக்கம் ஊர்வலமாக செல்லவுள்ளது.
ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், கிளந்தான், திரெங்கானு, பேராக், கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் இந்த இயக்கம் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் வழி பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று நகராண்மைக் கழகத்தின் தலைவர் முகமட் ஃபவுசி யாத்தின் கூறினார்.
இந்த வட்டாரத்தில் புகழ்பெற்ற பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் சிறு நடுத்தர வர்த்தகங்களின் தயாரிப்பு பொருட்கள் குறித்தும் இந்த ஊர்வல இயக்கம் எடுத்துரைக்கும்.
நாட்டின் பிரதான நுழைவாயிலாக திகழும் இந்த வட்டாரத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளைக் கவரக்கூடிய பல இடங்கள் உள்ளன என்றும் அவர் சொன்னார்.
சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் மோட்டார் சைக்கிள் ஊரவலத்தை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு பேசினார்.