கோலாலம்பூர், ஜன,31:
இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மாமன்னர் பதிவியேற்பு , சத்திய பிரமாண அறிக்கை வாசித்தல் மற்றும் கையெழுத்திடல் சடங்கிற்குப் பின்னர் மாமன்னரின் பிரகடன அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வாசித்தார்.
அரசியலமைப்பு சட்டத்தின் 32 ஷரத்தின் கீழ் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தால் தேர்வு செய்யப்படுபவர் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் என்றழைக்கப்படுவார்.
அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது பட்டியலின்படி சுல்தான் அல்-அப்துல்லா நாட்டின் 16ஆவது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எனவே, சத்திய பிரமாணம் செய்து பதவியேற்றுள்ள அல்-சுல்தான் அப்துல்லா இனி மாட்சிமைத் தங்கிய மாமன்னர் என்று இதன் வழி பிரகடனம் செய்யப்படுவதாக பிரதமர் மகாதீர் அறிவித்தார்.