SELANGOR

மேலும் ஓர் உணவகம் மூடப்பட்டது!

ஷா ஆலம், பிப்.1:

இங்குள்ள் செக்‌ஷன் 7-இல் உள்நாட்டு உணவு வகைகளை விற்கும் உணவகம் ஒன்று அடுத்த 2 வாரங்களுக்கு மூடப்பட வேண்டும் என்ற உத்தரவு உடனடியாகப் பிறப்பிக்கப்பட்டது.

உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு, குடிநுழைவு துறை, இஸ்லாமிய விவகார துறை ஆகியவற்றுடன் ஷா ஆலம் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட உணவகத்தை மூடும் நோட்டிஸ் வழங்கப்பட்டது.

இந்தச் சோதனை நடவடிக்கை சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள இரண்டு உணவகங்களில் மேற்கொள்ளப்பட்டது என்று எம்பிஎஸ்எ பொதுத் தொடர்பு மற்றும் நிறுவனப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமட் கூறினார்,

“இந்நடவடிக்கையின் போது அவற்றில் ஓர் உணவகத்திற்கு உடனடியாக மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்றார் அவர்.

மேலும் அந்த உணவகத்திற்கு 5 எச்சரிக்கை நோட்டீசுளும் 5 அபராத நோட்டீசுகளும் வழங்கப்பட்டன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :