NATIONAL

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் மலேசியாவின் முதலாவது பறக்கும் கார்

கோலாலம்பூர், பிப்.26-

உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு மலேசியாவின் முதல் பறக்கும் கார் தயாரிக்கப்படும் என்று தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரிட்சுவான் முகமது யூசோப் கூறினார்.

அந்த வாகனத்தின் மாதிரி தயாராகிவிட்டதாகவும் அது விரைவில் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

நம்மிடம் அதற்கான தொழில்நுட்பம் தயாராக இருப்பதால், இதன் அமலாக்கம் எத்தனை விரைவாக நடைபெறும் என்பதைப் பொறுத்தே அந்த அறிமுகம் அமையும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்த வாகனம் மிகவும் பாதுகாப்பானது. குறைந்தளவு உயரத்தில் ஏற்புடைய வேகத்தில் பறக்கும் ஆற்றலையும் அது கொண்டிருக்கும் என்றார் அவர்.


Pengarang :