கோலாலம்பூர், ஆக.1-
பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அறிந்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆண்களின் தவறான நடவடிக்கைக்காகப் பெண்களை குற்றம் கூறுவது அறிவுக்குப் பொருந்தாத செயலாகும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீசா கூறினார்.
குற்றச்செயலில் இருந்து பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்நிலையில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றச் செயல்களுக்கு அவர்களையே குற்றம் சொல்வது எவ்வாறு நியாயமாகும் என்றார் அவர்.
பெண்களுக்கு எதிரான கருத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரிய கெஅடிலான் செனட்டரின் நடவடிக்கையை தாம் வரவேற்றாலும் கருத்துகளைத் தெரிவிக்கும்போது பரிவோடும் மற்றவர்களின் உணர்வுகளைப் பாதிக்காதவாறும் நடந்து கொள்வது அவசியம் என்று வான் அஜீசா நினைவுறுத்தினார்.