NATIONAL

தீச்சம்பவத்தில் இரு பெண்கள் மரணம்

ஜோகூர் பாரு, ஆக.12-

இங்குள்ள தாமான் புக்கிட் இண்டா, ஜாலான் இண்டா 8/15 எனும் முகவரியில் உள்ள கடை வீட்டில் ஏற்பட்ட தீயில் இரு பெண்கள் கருகி மாண்டனர். 20 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க அவ்விரு பெண்மணிகளும் சம்பவம் இடத்திலேயே மாண்டனர் என்று இஸ்கந்தர் புத்ரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கை அதிகாரி இங்கி அனாக் பாக்காவ் கூறினார்.

இத்தீச்சம்பவத்தில் 6 வயது சிறார் உட்பட 40 வயது மதிக்கத்த ஓர் ஆடவர் மற்றும் 30 வயதுடைய ஒரு பெண்மணி ஆகியோர் காயமடைந்ததாக அவர் தெரிவித்தார்..
சம்பந்தப்பட்ட ஆடவரையும் பெண்ணையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி வழங்கியதோடு காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அருகிலுள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் சேர்த்தனர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :