ஜோர்ஜ்டவுன், செப்.10-
நாடு முழுவதிலும் தயாரிக்கப்படும் தேன் தரமாக இருப்பதை உறுதி செய்ய தேனீ வளர்ப்புத் துறையைச் சேர்ந்த 3000 க்கும் அதிகமானோருக்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் ( யுஎஸ்எம்) இதுவரை பயிற்சியளித்துள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்றோரில் பெரும்பாலோர் குடும்ப மாதர்களாகவும் பி40 பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இவர்களின் குடும்ப வறுமானம் இப்பயிற்சியின் வழி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் தவிர்த்து, இப்பயிற்சியில் பூர்வ குடியினர் சிலரும் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலோர் தேனீ வளரும் மரங்களின் முகவர்களாகவும் உள்ளனர்.
இதுவரை, பேரா, பூலாவ் பண்டிங் கம்போங் செமெலோரைச் சேர்ந்த 25 பூர்வ குடியினர் இப்பயிற்சியில் பங்கேற்றனர் என்று யுஎஸ்எம் பல்கலைக்கழகத்தின் நியுரோசைன்ஸ் பிரிவின் விரிவுரையாளர் டாக்டர் முகமது முஸ்தாபா கூறினார்.