SEMENYIH, 16 Julai — Ketua Polis Negara Datuk Seri Abdul Hamid Bador pada sidang media selepas Istiadat Penganugerahan Pingkat Jasa Pahlawan Negara di Batalion 4, Briged Tengah Pasukan Gerakan Am Semenyih hari ini. Seramai 231 anggota pelbagai pangkat bagi Jabatan Keselamatan Dalam Negeri dan Ketenteraman Awam menerima penganugerahan pingat tersebut. — fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்போர் மீது கடும் நடவடிக்கை

கோலாலம்பூர், செப்.20-

தமிழீழ விடுதலை புலி இயக்கம் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு புகழாரம் சூட்டுவதோடு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து தரப்பு மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் எச்சரித்தார்.

இது போன்ற நடவடிக்கை இந்நாட்டிற்கு உகந்தது அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.
“இந்த விடுதலை புலி அமைப்பின் பழைய வீடியோ பதிவுகள் சமூக வலைத் தளங்களில் நீண்ட காலமாகவே பரவி வருகிறது. இது குறித்து உள்துறை அமைச்சு விவாதித்துள்ளது. விரைவில் ஒரு முக்கிய தீர்மானம் எடுக்கப்படும்” என்று அவர் சொன்னார்.

இந்த வீடியோ பதிவுகள் பரப்படுவதற்காக மட்டுமல்லாமல் முன்பு நடந்த பல்வேறு சம்பவங்கள் மீதும் போலீஸ் விசாரணை மேற்கொண்டு முறையான நடவடிக்கை எடுக்கும் என்று டான்ஸ்ரீ பாடோர் கூறினார்.


Pengarang :