SELANGOR

அமலாக்க சோதனையில் 279 பீப்பாய் எல்பிஜி பறிமுதல்!

ஷா ஆலம், செப்.20:

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் கிளை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 279 வாயூ பீப்பாய் மற்றும் ,4632 கிலோகிராம் எடையிலான பெட்ரோலிய திரவ வாயூ பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சிலாங்கூர் மற்றும் புத்ராஜெயா அமலாக்க அதிகாரிகள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு புக்கிட் ஓயூஜி தொழில்பேட்டை பகுதியில் உள்ள கட்டடத்தில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று கேபிடிஎன்எச்இபி சிலாங்கூர் இயக்குனர் முகமது ஜிக்ரில் அஸான் அப்துல்லா கூறினார்.

இந்நடவடிக்கையின்போது, 279 எல்பிஜி பீப்பாய்கள் கைப்பற்றப்பற்றன. அவற்றுள் 33 பீப்பாய்களில் 12 கிலோகிராம், 224 பீப்பாய்களில் 14 கிலோகிராம், 22 பீப்பாய்களில் 50 கிலோகிராம் திரவ வாயூ சேமிக்கப்பட்டிருந்தன. ஆயினும்151 பீப்பாய்களில் எல்பிஜி அடைக்கப்பட்டிருந்த வேளையில் எஞ்சியா 128 பீப்பாய்கள் காலியாக இருந்தன என்று அவர் சொன்னார்.

இந்த சோதனை நடவடிக்கையில் 3 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் அங்கு பணிபுரிபவர்கள் என்றும் மற்றோர் ஆடவர் அக்கிடங்கிற்குச் சொந்தக்காரர் என்றும் முகமது ஜிக்ரில் தெரிவித்தார்.


Pengarang :