பொக்கோ சேனா, அக்.3-
நாட்டில் பல்லின மக்களிடையே நிலவும் நல்லிணக்கமும் ஒருமைப்பாடும் பாதிக்கும் வகையில் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது அனைத்து தரப்புகளும் இனவாத விவகாரங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன அரசியலானது நாடு இத்தனை காலங்கள் கட்டிக் காத்த தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் என்று அமானா கட்சியின் துணைத் தலைவர் டத்தோ மாஃபூஸ் ஓமார் அறிவுறுத்தினார்.
“எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக பேசிவதுகூட ஒரு பிரச்னையல்ல. ஏனெனில் மத்தியில் ஆளும் கூட்டணி வலுவாக இருக்கிறது” என்றார் அவர்.
“நாம் அனைவரும் அரசியல் முதிர்ச்சியுடன் நடந்துக் கொள்வது அவசியமாகும். நாம் எழுப்பும் இன விவகாரம் நம்மிடையே மன இறுக்கத்த்தை ஏற்படுத்துவதோடு நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்” என்று அவர் நினைவுறுத்தினார்.