NATIONAL

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: ஆறு வேட்புமனு பாரங்கள் வாங்கப் பட்டுள்ளது

பொந்தியான், அக்டோபர் 24:

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பாரங்கள் ஆறு முறையே விற்கப் பட்டுள்ளதாக மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 8-இல் இருந்து நேற்று வரை ஆறு பாரங்கள் விற்கப் பட்டுள்ளது என எஸ்பிஆரின் மாநில துணை இயக்குநர் முகமட் ஜைடாட் அப்துல் சமாட் கூறினார்.

இந்த பாரங்களை மலேசியாவின் முன்னணி கட்சிகளின் பிரதிநிதிகள் வாங்கியதாகவும், இருந்தாலும் யாரும் வைப்புத் தொகை மற்றும் பிரச்சார கட்டணம் செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.


Pengarang :