SELANGOR

புக்கிட் காஞ்சிங் நீர் உறிஞ்சி குளம் தரம் உயர்த்தும் பணி நிறைவுற்றது!

கோலாலம்பூர், நவ.29-

புக்கிட் காஞ்சிங்கில் உள்ள நீர் உறிஞ்சி குளத்தை தரம் உயர்த்தும் நடவடிக்கை நிறைவுற்றதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை முதல் தண்ணீர் விநியோகம் தொடங்கியது. குடிநீர் விநியோகத் தடையை சீரமைப்பதற்கும் இத்தடையினால் பாதிக்கப்பட்ட 34 பகுதிகளின் பாதிப்பை குறைப்பதற்குத் தேவையான அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நிறுவனம் மேற்கொண்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் நிறுவன தொடரொஉ பிரிவு தலைவர் அப்துல் ஹாலிம் மாட் சோம் கூறினார்.

பயனீட்டாளர்களுக்கு சிறந்த தரமிக்க சேவையை வழங்குவதற்காக ஆயர் சிலாங்கூர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கிய சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பயனீட்டாளர்கள் அனைவரும் தாங்கள் நன்றி தெரிவிப்பதாக அவர் சொன்னார்.
நீர் விநியோக நடவடிக்கை குறித்த ஆகக் கடைசி தகவல்கள் தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாகவும் பயனீட்டாளர்கள் ஆயர் சிலாங்கூரின் அகப்பக்கம் மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்களுடன் பயனீட்டாளர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.


Pengarang :