ஆயர் கெரோ, டிச.6-
நடப்பில் உள்ள தேசிய கல்வி கடனுதவி திட்டத்தை (பிடிபிடிஎன்) அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக இளைஞர்களுக்கு அதிக கடன் சுமை அளிக்காத திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கெஅடிலான் இளைஞர் அணி கேட்டுக் கொண்டது.
2009ஆம் ஆண்டு தொடங்கி இந்தக் கடனுதவி திட்டத்தில் கடன் பெற்ற தனியார் பல்கலைக்கழக பட்டதாரிகளில் 68 விழுக்காட்டினர் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்தவர்களாவர் என்று அதன் தலைவர் அக்மால் நஸ்ருல்லா முகமது நஸிர் தெரிவித்தார்.
இந்த கடனுதவித் திட்டத்தின் கடன் தொகை சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், இன்னும் 20 ஆண்டுகளில் இது 76 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கும் என்றார் அவர்.
எனவே, முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் வழிவகையைப் பின்பற்றி வந்தால், இதன் கடன் தொகையானது அரசாங்கம் தற்போது சுமந்துக் கொண்டிருக்கும் 1எம்டிபி கடன் தொகையை மிஞ்சும் என்று அவர் நினைவுறுத்தினார்.