Foto Twitter Amirudin Shari
SELANGOR

பல்லின மக்கள் கொண்டாடும் பண்டிகைகளைப் போற்றுவீர்! – மந்திரி பெசார்

ஷா ஆலம், டிச.25-

நாட்டில் வாழும் பல்லின மக்களின் பெருநாள்களை அனைவரும் சேர்ந்து கொண்டாடும் தனித்தன்மையை மக்கள் அனைவரும் மதிக்க வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். அனைத்து இனங்களில் பெருநாட்களானது நாம் மதித்து பேணிக் காக்க வேண்டிய சொத்தாகக் கருதவேண்டும் என்று அவர் தனது டுவீட்டர் வழியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

“சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து தலைவர்களின் சார்பாக, கிறுஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவர்களுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இப்பெருநாளின் கொண்டாடும் அனைவரும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து குதூகலமாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று அவர் கூறினார்.


Pengarang :