ஷா ஆலம், டிச.25-
கோல லங்காட், உலு லங்காட், சிப்பாங் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் முழுமையாக சீரடைந்துள்ள வேளையில், பெட்டாலிங் வட்டாரத்தில் 99.8 விழுக்காடு சீரடைந்துவிட்டதாக ஆயர் சிலாங்கூர் நிர்வாகம் தெரிவித்தது.
பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் விநியோகம் சீரடந்துவிட்டதால், இன்று நண்பகல் முதல் சில ஓரிட சேவை மையங்களும் பொது தண்ணீர் குழாயகளும் மூடப்பட்டுவிட்டன என்று அந்நிறுவனத்தின் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ஹாலிங் மாட் சோம் கூறினார்.
சீரடைந்து விட்ட பகுதிகளுக்கான டாங்கி லோரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் சில இன்னும் சீரடையாதப் பகுதிகளுக்கு அனுப்பட்டன என்றும் அவர் சொன்னார்.
இன்றிரவுக்குள் இன்னும் சீரடையாத பகுதிகளிலும் தண்ணீர் விநியோகம் முழுமையாகச் சீரடைந்துவிடும் எனத் தமது தரப்பு எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.