நியூ டெல்லி, மார்ச் 28:
ஏறக்குறைய 1270 மலேசியர்கள் நியூ டெல்லி, சென்னை, திருச்சி, மும்பை மற்றும் அம்ரிட்சர் ஆகிய நகரங்களில் நம் நாட்டிற்கு திரும்ப காத்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்டு அரசாங்க அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் என மலேசிய தூதரக அதிகாரி அறிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
” மலேசிய அரசாங்கம் நியூ டெல்லியில் அமைந்துள்ள தூதரகத்தின் வழி இந்திய அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மலேசியர்களை நாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது,” என்று பெர்னாமாவிடம் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி தெரிவித்தார்.
மலேசியா அம்ரிட்சர் மற்றும் நியூ டெல்லி ஆகிய நகரங்களில் இருக்கும் மலேசியர்களை கொண்டு வர விண்ணப்பம் செய்துள்ள வேளையில் ஏற்கனவே மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ளவர்களொ கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.