ஷா ஆலம், ஏப்.3-
நடமாட்ட கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உதவி தேவைப்படும் தரப்பினருக்கு ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா சிறப்பு உணவு உதவியை வழங்கி வருகிறார்.
ஏழ்மையில் வாழும் பி40 தரப்பினர், மாத வருமானம் இல்லாதவர்கள் மற்றும் உரிமம் இன்றி வர்த்தகம் புருந்து வரும் சிறு வர்த்தகர்கள் போன்றவர்களுக்கு மாநில அரசு வழங்கிய ஒதுக்கீட்டைக் கொண்டு அத்தியாவசிய பொருட்களை இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் தாம் வழங்கி வருவதாக் அவர் சொன்னார்.
இதனிடையே, சிலாங்கூர் ஜாக்காட் வாரியம். சமூக நல இலாகா மற்றும் சிலாங்கூர் ஸ்மார்ட் காசே ஈபு (கிஸ்) ஆகியவற்றின் கீழ் உதவி பெறாதவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் தனத் முகநூலில் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் மூத்த குடிமக்கள், உடல் பேறு குறைந்தோர் மற்றும் ஆதரவின்றி தனியாக வாழும் மக்கள் மீதும் கவனம் செலுத்தப்படுகிறது என்றார் அவர்.