SELANGOR

தனிமைப்படுத்தும் மையத்திற்கு செல்லும் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது !!!

ஷா ஆலம், ஏப்ரல் 11:

வெளிநாட்டில் இருந்து திரும்பிய மலேசியர்களை தனிமைப்படுத்த மையத்திற்கு கொண்டு செல்லும் ஸ்மார்ட்  சிலாங்கூர் பேருந்துகள் ஒவ்வொரு முறையும் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது என போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். இந்த நடைமுறை மலேசிய சுகாதார அமைச்சு நிர்ணயித்த வழிகாட்டி ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” ஆகவே, பொது மக்கள் குறிப்பாக ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகளில் பயணிக்கும் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். நாங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வழிமுறைகளை கடை பிடித்து வருகிறோம்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு அவர் தெரிவித்தார்.

தற்போது மொத்தம் 20 ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் மலேசியர்களை விமான நிலையத்தில் ஏற்றிக் கொண்டு தனிமைப்படுத்த மையத்திற்கு கடந்த ஏப்ரல் 3-இல் இருந்து 14 வரை பணியில் ஈடுபட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :