உலு கிள்ளான், ஏப்ரல் 11:
சிலாங்கூர் மாநிலத்தில் இன்னும் 7% பொது மக்கள் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றாமல் இருந்து வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சிலாங்கூர் காவல்துறை நேற்று தம்மிடம் கொடுத்த அறிக்கையின் படி 93% மாநில மக்கள் பிகேபி நடைமுறைகளை பின்பற்றி நடக்கிறார்கள் என்றும் 800 நபர்கள் மதிக்காமல் செயல்பட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
” கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இந்த நேரத்தில் பொது மக்கள் நோய் சங்கிலி தொடரை நிறுத்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும்,” என்று லெம்பா கெராமாட் எம்பிஏஜே பல்நோக்கு மண்டபத்தில் உலு கிள்ளான் சட்ட மன்ற தொகுதியின் உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.