SELANGOR

கிள்ளானில் வாகனத்தில் அமர்ந்தவாறே கோவிட்-19 பரிசோதனை !

ஷா ஆலம், ஏப்.16-

கிள்ளான் மக்கள் இப்போது வாகனத்தில் அமர்ந்தவாறு கோவிட்-19 தொற்று பரிசோதனையை மேற்கொள்ளலாம். இந்த வசதி கிள்ளான் துறைமுகத்தில் உள்ள சுகாதார கிளினிக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சேவையைப் பெற விரும்புவர்கள் சம்பந்தப்பட்ட கிளினிக்கில் முன் கூட்டியே முன்பதிவு செய்வது அவசியமாகும் என்று தெ ஸ்டார் நாளேடு தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட நபரின் முன்பதிவு குறித்து மலேசிய சுகாதார அமைச்சு குறுந்தகவல் வழி உறுதி செய்த பின்னரே அந்நபர் அப்பரிசோதனைக்குச் செல்ல முடியும் . அன்மையில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் அல்லது கோவிட்-19 தொற்று நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் ஆகியோருக்கு இந்த சோதனை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படும் என்று பண்டாமாரான் சட்டமன்ற உறுப்பினர் தோனி லியோங் தக் சீ கூறினார்.

இவர்கள் தவிர்த்து தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவர்களும் இந்தச் சோதனைக்கு தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 20 பேர்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த சோதனைக்கு கட்டணம் ஏதும் இல்லை என்றார் அவர்.


Pengarang :