SELANGOR

யுனிசெல்லில் வருகை புரியும் அனைவரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்

ஷா ஆலம், ஏப்.16-

கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக ஷா ஆலம் மற்றும் பெஸ்தாரி ஜெயா ஆகிய வளாகங்களில் உள்ள சிலாங்கூர் பல்கலைக்கழகத்திற்குள் (யுனிசெல்) நுழை வாயிலாக வருகை புரியும் ஒவ்வொரு தனிநபரின் உடல் உஷ்னம் பரிசோதனை செய்யப்படுவதாக யுனிசேல் தொடர்பு பிரிவு இயக்குநர் ஹாஸ்னி அபு ஹசான் கூறினார்.

உடல் நலமில்லை என்று கண்டறியப்படும் நபர்கள் உள்ள வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார் அவர்.
பணி புரிவதற்காக பணியாளர்கள், பயில்வதற்காக வரும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரின் உடல் உஷ்னம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என்று அவர் விளக்கினார்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக பாஅதுகாப்பு தரப்பினர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
நாட்டில் இத்தொற்று பரவுவதைத் தடுக்க இந்நடவடிக்கை உதவியாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :