ஷா ஆலம், ஏப்ரல் 20:
பத்து தீகா சட்ட மன்ற தொகுதியின் மக்கள் சேவை அலுவலகம் மற்றும் பொது வீடமைப்பு திட்ட நிர்வாகமும் இணைந்து 500 சுய பாதுகாப்பு ஆடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு முன் வரிசை பணியாளர்களுக்கு வழங்கினர் பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் தெரிவித்தார். கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் பணியாளர்களுக்கு பயனாக அமைகிறது என அவர் கூறினார்.
இதனிடையே,தமது சட்ட மன்ற அலுவலகம் தொடர்ந்து பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து வருகிறது என குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து முன் வரிசை பணியாளர்களுக்கு மேலும் உணவு பொருட்கள் மற்றும் முகமூடிகளை இலவசமாக வழங்கி வருவதக ரோஸ்ஸியா இஸ்மாயில் குறிப்பிட்டார்.