NATIONAL

புதியதாக கோவிட்-19 நோய் கிளஸ்தர் ஜொகூர் பெங்கெராங்கில் தோன்றியுள்ளது

புத்ராஜெயா, ஏப்ரல் 22:

ஜோகூர் பெங்கெராங்கில் கொவிட்-19 தொற்றுக்கண்ட புதிய கிளஸ்தரை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது. கோவிட்-19 நோயாளி மார்ச் 16-இல் ஒரு தனியார் மருந்தகத்தில் சிகிச்சை பெறும் போது  டெங்கி காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார்.

“ அடுத்த நாள், நோயாளி மார்ச் 18 அன்று பெங்கெராங்கிற்குத் திரும்புவதற்கு முன்பு சிலாங்கூரில் உள்ள உறவினர்களைப் பார்க்க பல இடங்களுக்குச் சென்றார்,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நோயாளியின் நிலை மோசமடையத் தொடங்கியதாகவும், ஆபத்தான நிலையில் மார்ச் 20 அன்று ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் அவர்  கூறினார்.


Pengarang :