புத்ராஜெயா, ஏப்ரல் 23:
பல்கலைக் கழக தங்கும் விடுதியில் அடைப்பட்டு இருக்கும் சுமார் 1 லட்சம் உயர்கல்வி மாணவர்கள் கூடிய விரைவில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் இன்று தொலைக்காட்சி நேரலை சிறப்பு ஒளிபரப்பில் அறிவித்துள்ளார். சுகாதார அமைச்சு தற்போது மாணவர்களை கொண்டு செல்லும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது என பிரதமர் தெரிவித்தார்.
” நாம் தொடர்ந்து மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் நடவடிக்கையை திட்டமிட வேண்டும். எந்த ஒரு நோய் பரவும் ஆபத்தும் ஏற்படக்கூடாது. வீடு திரும்பும் முன்பாக மாணவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கோவிட்-19 நோய் அவர்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று பிரதமர் கூறினார்.