NATIONAL

பொது சேவை பணியாளர்கள் நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர்!

கோலாலம்பூர், மே 1-

மலேசியாவில் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறிப்பாக பொது சேவை பணியாளர்களுக்கு தனது தொழிலாளர் தின வாழ்த்துகளை அரசாங்க தலைமை செயலாளர்கள் டத்தோஸ்ரீ முகமது ஜுக்கி அலி தெரிவித்துக் கொண்டார்.
பொது சேவை ஊழியர்கள் நாட்டின் நாடித் துடிப்பாகவும் முதுகெலும்பாகவும் திகழ்கின்றனர் என்று அவர் புகழாரம் சூட்டினார்.

– “கோவிட்-19 தொற்று பரவலானது புதிய முன்னுதாரணமாக விளங்குவதோடு வேலை கலாச்சாரத்தையும் மக்களின் சமூக வழக்கத்தையும் மாற்றியுள்ளது” என்றார் அவர். எனினும், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய உற்பத்தி ஆற்றலுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது” என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் முன் வரிசை பணியாளர்கள் உட்பட நாட்டில் மொத்தம் 1.6 மில்லியன் பொது சேவை பணியாளர்கள் உள்ளனர்.


Pengarang :