ஷா ஆலம், மே 1-
மாநிலத்தின் காஏ ஈபு உதவித் திட்டத்திற்கு (கிஸ்) இணையம் வாயிலாக தனித்து வாழும் தாய்மார்கள் விண்ணப்பிக்க இங்குள்ள அரசு சாரா இயக்கங்கள் (என்ஜிஓ) முக்கிய பங்காற்ற வேண்டும் என்று சமூக நலத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா முகமது வேண்டுகோள் விடுத்தார்.
பெரும்பாலான தனித்து வாழும் தாய்மார்கள் தொழில்நுட்ப பயன்பாட்டில் ஆற்றல் இல்லாமல் இருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.
அடுத்த வாரம் இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பம் தொடங்கவிருப்பதால், சம்பந்தப்பட்ட தாய்மார்களுக்கு அரசு சாரா அமைப்புகள் உதவ முன்வர வேண்டும் என்று சிலாங்கூர்கினியிடம் டாக்டர் சித்தி தெரிவித்தார். நடமாட்ட கட்டுபாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்லின சமூகத்தைச் சேர்ந்த தாய்மார்களிடம் இருந்து அதிக அளவிலான கோரிக்கைகளைப் பெற்றதைத் தொடர்ந்து இச்சிறப்பு உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அவர் சொன்னார்.
இச்சிறப்புத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட கடைகளைகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு தனித்து வாழும் தாய்மார்களுக்கு தலா 200 ரிங்கிட் வழங்கப்படும் என்றார் அவர்.