ஷா ஆலம், மே 18:
பொது மக்கள் மீது கோவிட் -19 தொற்று நோய் பரவலால் பாதகமான விளைவுகளை குறைக்க அரசாங்கம் செயல்படும் என்று மேன்மை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா நம்புகிறார். நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை கோவிட்-19 பென்டாமீக் ஏற்படுத்தியுள்ளது என்று மாட்சிமை தங்கிய யாங் டி-பெர்டுவான் அகோங் கூறினார்.
” தொற்று நோய் பரவலை எதிர்கொள்ள அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையை (சிபிபி) நாட்டு மக்கள் கடைபிடிக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய கவனம் ஆகும். பல தொழில்கள் மற்றும் வணிகங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை என்னால் புரிந்துகொள்கிறது. ஆனால் முதலாளிகள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்று நாடாளுமன்ற கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றும் போது இவ்வாறு அவர் கூறினார்.