கோலாலம்பூர், மே 27:
கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) கோலாலம்பூர் மொத்த சந்தையின் சுவர்களைச் சுற்றி தொடர்ந்து கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டவர்கள் யாரும் சந்தை நுழைவாயிலாகப் பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு, சமூக இடைவெளி மற்றும் தூய்மை நடவடிக்கைகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதோடு, தளத்தைச் சுற்றியுள்ள சொத்துக்களைப் பாதுகாக்க ரோந்து மற்றும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுவதாக இன்று ஒரு அறிக்கையில் டிபிகெஎல் தெரிவித்துள்ளது.
மொத்த சந்தையில் நுழையும் வாகனங்களின் கட்டுப்பாடும் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை சோதனை நடத்தப்படுகிறது. லாரிகள், தனியார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டாக்சிகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 1,395 வாகனங்கள் இன்று பரிசோதிக்கப்பட்டன, பரிசோதனையின் போது 1,530 பேர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்கிடையில், டிபிகெஎல் அலாம் ஃப்ளோராவுடன் இணைந்து ராஜா போட் சந்தையில் மே 18 முதல் இன்று வரை விரிவான துப்புரவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது