புத்ராஜெயா, ஜூன் 1:
நிபந்தனைக்கு உட்பட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான (பிகேபிபி)யை மீறிய குற்றத்திற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 38 பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வேளையில், 5 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டிருப்பதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.
பிகேபிபியை மீறிய குற்றத்திற்காக 356 பேருக்கு போலீஸ் அபதாரத்தை விதித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதில், நோன்பு பெருநாளின் போது வெளியேறிய குற்றம் தொடர்பான அபராதங்கள் எதுவும் விதிக்கப்படவில்லை. அவசர தேவைகள், இறப்பு சம்பவங்கள், வேலைக்காக மாநிலம் கடப்பது மற்றும் வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் கணவன், மனைவிகள் சந்தித்துக் கொள்வது தவிர்த்து, இதர காரணங்களுக்காக மாநிலம் கடந்து செல்ல அனுமதி வழங்கப்படாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
இதனிடையே, அனைத்து தரப்பினரும் செயல்பாட்டு தரவிதிமுறையான எஸ்.ஓ.பியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் இஸ்மாயில் நினைவிறுத்தினார்.
–பெர்னாமா