கோலா லம்பூர், ஜூன் 18:
மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) தொடர்ந்து ஒன்பதாவது நாளை எட்டிய வேளையில் பொது மக்களுக்கு பல்வேறு விதிவிலக்குகளை அரசாங்கம் வழங்கி உள்ளது. இருந்தாலும், பலர் இன்னமும் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தை எதிர் கொள்ள கடந்த மார்ச் 18 தொடங்கி நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) அமல்படுத்தி பல விதிமுறைகளை அரசாங்கம் நிர்ணயம் செய்தது குறிப்பிடத்தக்கது.