SELANGOR

சிலாங்கூர் காவல்துறை: பிகேபிபி காலகட்டத்தில் 22 நபர்கள் கைது

ஷா ஆலம், ஜூன் 18:

கடந்த ஜூன் 10 தொடங்கி அமல்படுத்தப்பட்ட மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்தில் 22 நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறை தெரிவித்தது. இதில் 13 மலேசியர்கள் அடங்கும் என சிலாங்கூர் மாநில கோவிட்-19 சிறப்பு நடவடிக்கை குழு தலைவர் துணை கமிஷனர் முகமட் யாஸிட் முகமட் யீ கூறினார்.

” இதே காலகட்டத்தில், பிகேபிபி விதிமுறைகளை பின்பற்றாத 44 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது,” என ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கடந்த மார்ச் 18-இல் அமல்படுத்தியிருக்கும் நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டம் தொடங்கி இன்று வரை மொத்தம் 6,001 நபர்களை காவல்துறை சோதனை நடத்தியதாக முகமட் யாஸிட் கூறினார்.


Pengarang :