NATIONAL

தனியார் கல்வி மையங்கள் கூடிய விரைவில் மீண்டும் திறக்கபடும் !!!

புத்ராஜெயா, ஜூன் 24:

தனியார் கல்வி மையங்கள் திறப்பது குறித்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். எந்தவொரு முடிவையும் அறிவிப்பதற்கு முன்னர், அதன் தொடர்பான எஸ்.ஓ.பி.-யை கல்வி அமைச்சு பரிந்துரைக்கும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, நோய்த் தொற்று அதிகம் இருக்கும் தங்கள் சொந்த நாடுகளுக்குச் சென்ற வீட்டுப் பணி பெண்கள், மலேசியாவிற்கு திரும்புவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

இருந்த போதிலும், வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களைச் சேர்ந்த மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள், நாட்டிற்குள் நுழைந்து வேலை செய்ய எவ்வித தடையும் இல்லை என்ற போதிலும், அரசாங்கம் நிர்ணயித்துள்ள அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி மேலும் வலியுறுத்தினார்.


Pengarang :