எனினும், நடப்பில் இருக்கும் சட்டத்தின் அடிப்படையில், போலிச் செய்திகள் தொடர்பாக கிடைத்த சில அறிக்கைகளை மதிப்பிடும் பணியை, பி.டி.ஆர்.எம்.-மும், எஸ்.கே.எம்.எம்.-மும், மேற்கொண்டு வருவதாக அவர் இன்று, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். கடந்த ஜூலை 18-ஆம் தேதி வரை, கொவிட்-19 நோய்க் குறித்த போலிச் செய்திகள் தொடர்பாக பி.டி.ஆர்.எம்.-மும், எஸ்.கே.எம்.எம்.-மும், 266 விசாரணை அறிக்கைகளைத் திறந்திருந்தன.
அதில், 172 அறிக்கை இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், 30 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பதாகவும், 12 பேருக்கு எச்சரிக்கை அறிக்கை வழங்கப்பட்டிருப்பதாகவும், 13 பேர் நீதிமன்ற விசாரணையில் இருப்பதாகவும் எஞ்சிய 17 பேர் குற்றங்களை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
போலிச் செய்திகள் பரவுவது குறித்து, பி.டி.ஆர்.எம்.-மும், எஸ்.கே.எம்.எம்.-மும், தொடர்ந்து கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்மாயில் குறிப்பிட்டார்.
— பெர்னாமா