masyarakat
, செப் 22- கடந்த நான்கு ஆண்டுகளில் 19 மலேசியா்கள் இந்திய பிரஜைகளுக்கான அந்தஸ்து பெற்றுள்ளதாக இந்திய உளவுத்துறை அமைச்சு கூறியது.
இந்திய பிரஜாவுரிமைப் பெற்ற 44 நாடுகளைச் சேர்ந்த 2,729 பேரில் இந்த 19 பேரும் அடங்குவர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இவர்கள் இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டதாக இணை உள்துறை அமைச்சர் நித்தியானந்த் ராய் நாடாளுமன்றத்தில் கூறினார்.
இந்திய பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களில் 2,120 பாகிஸ்தானியர்கள், 188 ஆப்கானிஸ்தானியர்கள், 99 வங்காளதேசிகள் 60 அமெரிக்கர்கள், 13 சிங்கப்பூரியர்கள் ஆகியோரும் அடங்குவர்.