NATIONAL

புதிய அரசாங்கம் அமைக்க அமானா முழு ஆதரவு மாட் சாபு அறிவிப்பு

ஷா ஆலம், செப் 23- டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்க அமானா கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஹாஜி முகமது சாபு அறிவித்துள்ளார்.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்திற்கு எங்கள் கட்சியின் 11 உறுப்பினர்களும் முழு ஆதரவை வழங்குவர் என்று கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தங்களுக்கு போதுமான அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.


Pengarang :