SELANGOR

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகம் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தகவல்

கிள்ளான், அக் 9- நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 
அமலாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உணவு பொட்டலங்களை ஏற்பாடு செய்துள்ளது.

தேவையின் அடிப்படையில் அந்த உணவு பொருட்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்
 03-3381 7602 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அவற்றை பெறலாம் 
என்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி. குணராஜ் கூறினார்.

பொது முடக்கம் காரணமான இரண்டு வார காலத்திற்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படலாம் என்பதால் இப்பகுதி மக்கள் போதுமான உணவு கையிருப்பைக் கொண்டிருப்பர் எனத் தாம் எதிர் பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

பண்டார் புக்கிட் திங்கி, தாமான் செந்தோசா, ஜாலான் டத்தோ டாகாங், பிங்கிரான்
 அண்டாலஸ் ஆகிய பகுதிகளில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்த காரணத்தால் செந்தோசா சட்டமன்ற தொகுதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்படுத்தப் 
பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Pengarang :