NI
NATIONAL

டத்தோ ஸ்ரீ அன்வார் தனக்கு 120க்கும் அதிகமான நா. உறுபி ஆதரவு உள்ளதை உறுதிபடுத்தினார்

கோலாலம்பூர் அக்14;- கடந்த செப் 23 ந் தேதி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்திரிக்கையாளர்களிடம்  பிரதமர் டான்  ஸ்ரீ மொகிதீன் யாசினின் ஆட்சி பெரும்பான்மை இழந்துவிட்டது என்று கூறியதை  மீண்டும் உறுதிப்படுத்தும் வண்ணம் இன்று அக்டோபர் 13 ந்தேதி காலை 10-25 மணிக்கு  மேன்மை தாங்கிய பேரரசர் அவர்களைச் சந்தித்துத் தனக்கு 120க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதை உறுதிப்படுத்தியதாக  இன்று பிற்பகல் 2.00 மணிக்குக் கோலாலம்பூர் லீ மெரிடியன் தங்கும் விடுதியில் நடந்த  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

பிரதமர் டான்  ஸ்ரீ மொகிதீன் யாசினின்  அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துவிட்ட ஒன்று என்று தான் ஏற்கனவே கூறியதை உறுதிப்படுத்தும் வண்ணம், தாம் இன்று மீண்டும் மாமன்னரைப் பார்த்து உறுதிப்படுத்தியதாகக் கூறிய அவர் மேன்மை தாங்கிய பேரரசர் அவர்களிடம்  தான் வழங்கிய விபரங்கள் அடிப்படையில் மாமன்னர் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க எல்லாச் சாராரும் மாமன்னருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அமைதி காக்கவேண்டும் என்று  கேட்டுக் கொண்டார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

மலேசிய நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 222 இடங்களில் 112 இடங்களை கொண்ட தரப்புக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் தனக்கு 120 க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் கையெழுத்திட்டு வழங்கிய ஆதரவு கடிதம்  மாமன்னரிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக  டத்தோ ஸ்ரீ தரப்பு கூறியுள்ளது.  

 


Pengarang :