ஷா ஆலம், பிப் 9– சிலாங்கூரில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2800 உணவு உதவி பொருட்கள் நேற்று காலை அனுப்பபட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வீரமன் தெரிவித்தார். நலிந்த குடும்பங்களுக்கு உதவும் பொருட்டு அன்றாடம் தேவைப்படும் உணவு பொருட்களை அனைத்து சட்டமன்றங்களுக்கு அனுப்ப பட்டிருப்பதாகவும் உதவி தேவைப்படுபவர்களுக்கு ஒவ்வொரு சட்டமன்றத்தை சேர்ந்த இந்திய கிராமத்து தலைவர்கள் மூலமாகவே அக்குடும்பங்களுக்கு கொண்டு போய் சேர்க்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வருடம் மாநில அரசு நடத்தவிருந்த மாநில விழாவான பொங்கல் விழா மற்றும் தைப்பூச திருவிழாவிற்கான செலவினங்களை இம்முறை இத்தகைய திட்டத்திற்கு வழிவகுத்திருப்பதாகவும் அவர் கூறினார். மாநில ஆட்சி குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட விவகாரம்,மக்களுக்கான உண்மையான ஒரு உன்னதமான அரசாங்கம் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
கோவிட் 19,பெரும் நோய் தொற்றால் பல ஆயிரம் பேர் வறுமையின் பிடியிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிடும் நோக்கத்தில் இத்திட்டத்தை தான் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.