HEALTHMEDIA STATEMENTNATIONAL

21,668 நேர்வுகளுடன் புதிய உச்சம் தொட்டது கோவிட்-19

ஷா ஆலம், ஆக 12- நாட்டில் இன்று 21,668 சம்பவங்களுடன் புதிய உச்சத்தை தொட்டது கோவிட்-19 நோய்த் தொற்று.  நேற்று இந்த எண்ணிக்கை 20,780 ஆக இருந்தது.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான இன்றைய தரவுகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்ட சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா, சிலாங்கூரில் இந்த எண்ணிக்கை இறங்கு முகமாக உள்ளதாக குறிப்பிட்ட்டார்.

இம்மாநிலத்தில் நேற்று 6,921 ஆக இருந்த நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 6,278 ஆக குறைந்துள்ளதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர், கெடா மற்றும் சபா ஆகிய மாநிலஙகளில் நோய்த் தொற்று இரண்டாயிரத்தை தாண்டியுள்ளன. அம்மாநிலங்களில் முறையே 2,435, 2,143 மற்றும் 2,052  சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான மாநிலங்களில் ஜொகூர் (1,706), பினாங்கு (1,229), சரவா (1,216 ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதர மாநிலங்களில்  நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

கிளந்தான் (972), பேராக் (930), நெகிரி செம்பிலான் (899), பகாங் (629), திரங்கானு (594), மலாக்கா (494), புத்ரா ஜெயா (56), பெர்லிஸ் (23), லபுவான் (11).


Pengarang :