Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari ketika ditemui media selepas Program Jelajah Usahawan Digital Selangor siri ketiga di Menara Majlis Perbandaran Ampang Jaya pada 19 September 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI

மக்களுக்கு உதவும் பண்பு கெஅடிலான் கட்சியில் வேரூன்றியுள்ளது-மந்திரி புசார்

பெட்டாலிங் ஜெயா, செப் 17- பொதுமக்களுக்கு உதவும் மற்றும் உதவி தேவைப்படுவோருடன் இருப்பதை பகிர்ந்து கொள்ளும் உணர்வு கெஅடிலான் கட்சியில் எப்போதும் பசுமையாக வேரூன்றியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருன் ஷாரி கூறினார்.

சிரமத்தில் இருப்போருக்கு நேர காலம் பாராமல் உதவிடும் மனப்போக்கு கெஅடிலான் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் நீண்ட காலமாகவே வேரூன்றி நிலைத்து நிற்கிறது என்று கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநில தலைமைத்துவ மன்றத் தலைவருமான அவர் சொன்னார்.

இவ்வாறு உதவிடும் மனப்பாங்கு நமக்கு புதியதல்ல. இந்த உணர்வை நாம் தொடர்ந்து மேம்படுத்தி வர வேண்டும். நாம் அரசாங்கமாக மாறி விடும் போது சில வேளைகளில் அரசாங்க நிதியுடன் பாதுகாப்பாக இருப்பது போன்ற எண்ணத்தைப் பெற்று விடுகிறோம் என்றார் அவர்.

ஆனால், மக்களுக்கு உதவ நமது சொந்தப் பணத்தை செலவிடும் போதுதான் எல்லையற்ற மனநிறைவை நாம் பெறுகிறோம். அந்த உணர்வை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள கெடிலான் தலைமையகத்தில் இன்று ஜெலாஜா பெடுலி நாடி ராக்யாம் திட்ட வாகன அணியை வழியனுப்பும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த வாகன அணியை கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழியனுப்பி வைத்தார்.

 


Pengarang :