ஷா ஆலம், அக் 2- சிலாங்கூரில் உள்ள மூன்று அருங்காட்சியகங்களும் ஒரு நினைவுச் சின்னமும் நேற்று தொடங்கி பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டன. சபாக் பெர்ணம் விவசாய மற்றும் மீன்வள அருங்காட்சியகம், கோல சிலாங்கூர் அருங்காட்சியகம், ஜுக்ரா அருங்காட்சியகம் மற்றும் இஸ்தானா பண்டார் ஆகியவையே திறக்கப்பட்ட அந்த சுற்றுலா மையங்களாகும் என்று பாடிக் எனப்படும் மலாய் பாரம்பரிய கழகம் கூறியது. அருங்காட்சியகத்திற்கு ஒரு சமயத்தில் 50 பேரும் நினைவுச் சின்னத்திற்கு 15 பேரும் வருகையளிக்கலாம் என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் பர்ஹானி சம்சுடின் கூறினார். இந்த மையங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக வருவதை காட்டிலும் முன் பதிவு செய்துவிட்டு வருவதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். முன்பதிவின்றி வருவோர் வரிசைப் படி காத்திருக்கவேண்டி வரும் என்றார் அவர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/09/muzium-galeri-960x640.jpg)