HEALTHNATIONALSELANGOR

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் இளையோருக்கு தடுப்பூசி செலுத்தத் தயார் – மந்திரி புசார் கூறுகிறார்

கோம்பாக், அக் 2- சிலாங்கூரிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கு மாநில அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்த மாநில அரசு தயாராக உள்ளது.

அத்தரப்பினரை நோய்த் தொற்று அபாயத்திலிருந்து காக்கும் நடவடிக்கையாக இந்த தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்த தாங்கள் விரும்புவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதன் தொடர்பான பரிந்துரையை தாமோ அல்லது ஆட்சிக்குழுவோ விரைவில் சுகாதார அமைச்சிடம் பரிந்துரைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இளையோருக்கு சினோவேக் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இளையோருக்கான தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு அவர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

 

 


Pengarang :