நாட்டில் குறைந்து வருகிறது கோவிட்-19 நோய்த் தொற்று

ஷா ஆலம், அக் 4- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று நாடு முழுவதும் 8,075 நேர்வுகள் பதிவான. நேற்று இந்த எண்ணிக்கை 9,066 ஆக இருந்தது.

சிலாங்கூரில் நேற்று 1,000 ஆக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 686 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர்  ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நான்கு இலக்க நோய்த் தொற்று எண்ணிக்கையை பதிவு செய்த மாநிலங்களில் சரவா மற்றும் கிளந்தான் ஆகியவை உள்ளன. இவ்விரு மாநிலங்களிலும் முறையே 1,189 மற்றும் 1,020 சம்பவங்கள் பதிவாகின.

இதர மாநிலங்கள் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-

சரவா – 1,189
கிளந்தான் – 1,020
பினாங்கு – 853
ஜொகூர்– 781

சிலாங்கூர் – 686

சபா – 677
திரங்கானு – 636
கெடா– 628
பேராக் – 548
பகாங் – 522

மலாக்கா – 219
கோலாலம்பூர் – 151
நெகரி செம்பிலான் – 108

பெர்லிஸ் – 36
புத்ரா ஜெயா – 19
லபுவான் – 2

 


Pengarang :